Friday, 20 February 2015

நயன்தாராவிற்கு அழைப்பு விடுத்த நித்யானந்தா ஆசிரமம்....













 நடிகை நயன்தாரா, ரஜினி, விஜய், அஜீத், சூர்யா என பல்வேறு முன்னனி நடிகர்களுடன் நடித்துவிட்டார். கடந்த 10 வருடங்களாக தமிழ் சினிமாவில் முன்னனி நடிகையாக வலம்வந்து கொண்டிருக்கும் நயன்தாரா சிம்பு, பிரபு தேவா என இரண்டு முறை காதல் தோல்வியால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் ஒருவித மனக்கவலையுடனே அவர் காணப்படுகிறாராம்.
எங்கள் ஆசிரமத்திற்கு வாருங்கள்  ‘வாருங்கள் சந்தோஷமாக இருக்க வைக்கிறோம்’ என்று நித்தியானந்தா ஆசிரமம் சார்பில் நயன்தாராவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாம்.
பெங்களூரு அருகில் உள்ள நித்தியானந்தாவின் ஆசிரமத்தில் யோகா, மூச்சு பயிற்சி, பிராணாயாமம், நடனம் உட்பட வாழ்க்கையின் மகிழ்ச்சிக்கு தேவையான இன்னும் பல வித்தைகள் கற்றுக்கொடுக்கப்படுகின்றன. இந்த வித்தைகளை கற்றுக்கொடுத்து நயன்தாராவின் வாழ்க்கையில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் நோக்கில் அழைப்பு விடுத்துள்ளதாம் ஆசிரமம். ஆனால் இதற்கு நயன்தாரா தரப்பில் இருந்து இதுவரை எந்த கருத்தும் வெளியாகவில்லை.. எனினும் இதுதான்  இன்று முக்கிய விவகாரமாக ஊடகங்களில் வெளியாகியுள்ளது.


No comments:

Post a Comment